தண்மதியம்
பால் கட்டிய முலைகளை என்ன செய்வது? அறுத்து வீசவா? என்றாள்.. ஆட்சேபனை ஏதுமில்ல.. அதுவரை அழக்கூடாது எனும் கோரிக்கையை மட்டும் முன் வைத்தான்.. வெய்யிலின் மொழியில் சொல்வோமென "பாப்பாவை காக்கா தூக்கிட்டு போய்விட்டது. அவ்வளவுதான்" என்றான் நீண்ட மௌனத்திற்கு பின் அவள் கேட்டாள் "நெஜமாவே காக்கா தூக்கிட்டு போயிருக்குமா?" அவன் அழவேயில்லை என்று சொன்னால், நம்புவீர்களா?